கெலவரப்பள்ளி அணையில் பெண் பிணம்

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் பெண் பிணம் மிதந்தது.;

Update:2022-12-05 00:15 IST

ஓசூர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சென்னசந்திரம் கிராம நிர்வாக அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்