அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினீயர் தற்கொலை

10 ரூபாய் தகராறில் அண்ணன் பேச மறுத்ததால் விரக்தி அடைந்த பெண் என்ஜினீயர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-02-18 00:00 GMT

சென்னை,

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். என்ஜினீயரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

மலர்விழியிடம் அவரது அண்ணன் விட்டல், தனது செலவுக்கு பத்து ரூபாய் தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு மலர்விழியோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறி கொடுக்க மறுத்தார். இதனால் அண்ணன்-தங்கை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விட்டல், 'இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன்' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பத்து ரூபாய் பணத்துக்காக தனது அண்ணன் இனி பேசவே மாட்டேன் என கூறி சென்றதால் மனமுடைந்த மலர்விழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்