அன்னதானப்பட்டி:-
சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் சிங்கார முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழில்லான். கொத்தனார். இவருடைய மனைவி காயத்ரி (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் கொடியழகி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காயத்ரி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த 19-ந் தேதி திடீரென எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.