மத்திகிரி
ஓசூர் கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சுஜாதா (வயது 34). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த சுஜாதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.