பிளஸ்-2 மாணவி தற்கொலை

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-12-11 18:45 GMT


காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் சந்தைதோப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சிந்துஜா(வயது 16). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

புயல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கடந்த 8-ந்தேதி மாணவி தனது சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலை சிந்துஜா வீட்டில் உள்ள அறைக்குள் இருந்து நீண்டநேரமாக வெளியே வரவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் துப்பட்டாவல் அவர் தூக்கில் தொங்கிய படி கிடந்தார். உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சிந்துஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்