தூக்குப்போட்டு பெண் தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் மகன் இறந்த துக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-24 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கணேசன் மனைவி மீனாட்சி (வயது 53). கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மீனாட்சியின் இளைய மகனான கோபால், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி, சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மீனாட்சி இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்