எனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தாருங்கள்

கடன் தொல்லையால் மாயமான எனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தாருங்கள்; போலீசில் முதியவர் புகார்;

Update:2023-08-03 00:15 IST


மயிலாடுதுறை மாயூரநாதர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 71). இவர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகன் கவுதம்சந்த் (37). ஒரு செல் போன் டீலராக இருந்து வந்தார். தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அவருடன் மருமகள் சோனியா (35), பேத்திகள் பவ்யா (7), ஆருஸ்ரீ (6) ஆகியோரும் சென்றனர். அவர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. எனவே காணாமல் போன தனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். பின்னர் இந்த புகார் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்