குடிசையில் தீ விபத்து; 600 கிலோ கருப்பட்டி சேதம்

குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு 600 கிலோ கருப்பட்டி சேதம் அடைந்தது.

Update: 2023-05-31 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 53). பனை தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி. நேற்று பனையில் இருந்து இறக்கிய பதநீரை காய்ச்சி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதிலிருந்த தீ குடிசையில் பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதனால் குடிசை முழுவதும் தீயில் எரிந்தது. மேலும் குடிசையில் இருந்த 600 கிலோ கருப்பட்டி தீயில் சேதம் அடைந்தது. மேலும் பதநீர் காய்ச்சும் பொருட்கள் அனைத்தும் தீயில் முழுவதுமாக கருகின. வாழ்வாதாரம் இழந்துள்ள பனைத் தொழிலாளிக்கு மாவட்ட நிர்வாகம் நிதி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பால்பாண்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்