முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்திரபாண்டியன் பிறந்தநாள் விழா

முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்திரபாண்டியன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-16 18:42 GMT

கரூர் நாடார் பைனான்ஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அச்சம் அகற்றிய அண்ணல் டபிள்யூ.பி. ஏ.சவுந்திரபாண்டியன் நாடாரின் 131-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மாநில துணைத்தலைவர் பி.லோகநாதன், கொங்கு மண்டல தலைவர் ஆர்.கூடலரசன், மாநில சட்டப்பிரிவு தலைவர் தென்னிலை ராம.கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சவுந்திரபாண்டியனின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், கரூர் மாவட்ட தலைவர் அலமேலு டெக்ஸ் மனோகர், கரூர் தெற்கு மாநகர தலைவர் காமராஜ், கரூர் மாவட்ட செயலாளர் எல்.ஐ.சி. திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்