வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி

தேனி அருகே கணினி உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.2 லட்சம மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-27 19:00 GMT

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 32). இவர் பழனிசெட்டிபட்டியில் கணினி விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு கடை வைத்துள்ளார். கணினி உபகரணங்களை இணையதளம் மூலம் வாங்கி வந்தார். அப்போது இணையதளம் வாயிலாக மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் நண்பரானார். அந்த நம்பிக்கையின் பேரில், கணினி உபகரணங்கள் வாங்கி அனுப்புவதற்கு தினேஷின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்தை பிரிதிவிராஜ் செலுத்தினார். ஆனால், அவர் உதிரி பாகங்கள் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றினார். இதுகுறித்து தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரிதிவிராஜ் மனு தாக்கல் செய்தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் இந்த மோசடி குறித்து தினேஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்