அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

திருக்கடையூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழகப்பட்டது.

Update: 2023-10-05 18:45 GMT

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்து கொண்டு 89 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். இதில் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாஸ்கரன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மணிமாறன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்