விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
நாகை நடராஜன் தமயந்தி அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் திலகர், கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை நகர சபை தலைவர் மாரிமுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.