இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-04-30 19:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி புதுகிராமம் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், பொதுநல மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச பொது மற்றும் கண் சிகிச்சை முகாமை நடத்தியது. பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம் தலைமை தாங்கினார்.

நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் முன்னிலை வகித்தனர். முகாமை நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா.கருணாநிதி தொடங்கி வைத்தார்.

முகாமில் டாக்டர்கள் எல்.சாரங்கபாணி, எஸ். பாலகிருஷ்ணன், ரஞ்சிதா, சோபனா, அஜய் செல்வா, பாலசுப்பிரமணியன், கமலா சுதன், காளீஸ்வரி மற்றும் டாக்டர் குழுவினர்கள் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், தீப்பெட்டி அதிபர்கள் ராஜவேல், செல்வ மோகன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி, நந்தகுமார், மாரிச்சாமி, சுரேஷ் கலந்து கொண்டார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்