திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு கிராமம் திருவள்ளூர் நகரில் வசித்து வந்த சுதந்திர போராட்ட தியாகி வெள்ளச்சாமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர். இவருக்கு வயது 99 ஆகும். இவரது மறைவையொட்டி நேற்று அவரது உடலுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.