தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

Update: 2023-09-30 08:56 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள மரவபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 54). மரம் ஏறும் தொழிலாளி. இவர் நல்லாகவுண்டன்கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சின்ன பையன் மரத்தில் இருந்து தவறி விழுந்து விட்டார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சின்னபையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்