தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் குப்பைகள் அகற்றம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2023-07-05 21:14 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் உள்ள பாண்டியன் நகர், சுந்தரம் நகர் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்தன. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் சாலையோரம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடந்தன. மேலும் இங்குள்ள குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், ஆடு, மாடுகள் கிளறி விடுவதால் சாலைகளிலும் குப்பைகள் பறந்து விரிந்து கிடந்தன. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக படத்துடன் செய்தி தினத்தந்தியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார். அதன் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி அங்கு பிளீச்சிங் பவுடரை தெளித்தனர். தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக குப்பகைளை உடனே அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளையும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்