கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு ஜெயில்

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update:2023-09-14 01:42 IST


2016-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி-நிலக்கோட்டை சாலை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் வந்த இருவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். வாகனத்தில் 48 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்ததுடன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கம்மாளபட்டியை சேர்ந்த பாண்டி (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-வது சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சுரேந்திரன் ஆஜரானார். விசாரணை முடிவில், பாண்டி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்