தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

விருதுநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-30 20:50 GMT

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் அருணா தேவி (வயது 21). இவர் சென்னைக்கு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டுமென பெற்றோரிடம் கேட்டார். அப்போது பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் நேர்முகத்தேர்வுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அருணாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி இவரது தாயார் ஷீலா தேவி (48) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்