இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே, மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி வன்னியசுந்தரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேகர், கட்டிடத் தொழிலாளி.இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 24) பீடி சுற்றும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இசக்கியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்து இருந்தார். அந்த குழு மூலம் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகளிர் குழுவில் அதிகளவில் கடன் வாங்கி இருந்த இசக்கியம்மாள், குடிப்பழக்கத்துக்கு உள்ளான கணவராலும் அவதிப்பட்டார்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட இசக்கியம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவில் அதிகளவில் கடன் வாங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்