தங்க சங்கிலி மாயம்

பெண்ணின் தங்க சங்கிலி மாயமானது

Update: 2022-09-26 22:33 GMT

நெல்லை டவுன் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி முத்தம்மாள் (வயது 53). இவர் அந்த பகுதியில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்