சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம்...!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-06-08 16:30 GMT


சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இரண்டு நாட்களாக கோவிலில் ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் போது பொது தீட்சிதர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் எங்களால் முழுமையாக ஆய்வு செய்ய இயலவில்லை என்று இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய புதுச்சேரி கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தானர். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்