ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-10-07 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர்களின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்