மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது;
சிவகங்கை
திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடக்கிறது. எனவே திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.