மூங்கில்துறைப்பட்டு அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-11-23 00:15 IST

வடபொன்பரப்பி, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சேட்டு (வயது 31). டிராக்டர் டிரைவரான இவர், அதேஊரில் உள்ள உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த சேட்டு தற்காலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்