லாரியில் கடத்தி வந்த1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது

கடமலைக்குண்டு அருகே லாரியில் கடத்தி வந்த 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-25 18:45 GMT

கண்டமனூர் போலீசார் நேற்று மாலை தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் சாக்கு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்த டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்