கனமழை எதிரொலி:மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழை காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-24 18:45 GMT

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யாததால் மேகமலை அருவி நீர்வரத்து இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேகமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன்காரணமாக நேற்று காலை மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல மேகமலை வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். அருவியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்