அரியலூரில் கனமழை

அரியலூரில் கனமழை பெய்தது.;

Update:2023-09-29 00:55 IST

அரியலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேபோல் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று திடீரென மாலை 3 மணியளவில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்