கிருஷ்ணராயபுரம்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை

கிருஷ்ணராயபுரம்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-08-25 18:30 GMT

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், மாயனூர், லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், புகழூர்,நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு7.30 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்