தாளவாடி அருகே பலத்த மழை போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-09-02 20:17 GMT

தாளவாடி அருேக பலத்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும், பலத்த மழையும் பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை தாளவாடியை அடுத்த தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், சிக்கள்ளி, இக்கலூர், திகனாரை, ஏரகனள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி...

இந்த மழை காரணமாக நெய்தாளபுரம் அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

மழை நின்று காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்னர் தான் 1 மணி நேரம் கழித்து வாகனங்கள் செல்ல தொடங்கின. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த வழியாக பஸ்களில் சென்ற பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்