பத்தமடையில் காற்றுடன் பலத்த மழை; மின்கம்பம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிப்பு

பத்தமடையில் காற்றுடன் பலத்த மழையின் காரணமாக மின்கம்பம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

Update: 2022-07-27 19:12 GMT

சேரன்மகாதேவி:

பத்தமடை, கேசவசமுத்திரம் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், பத்தமடை பேரூராட்சியில் சம்பந்தர் மேலத் தெருவில் தெருவோரமாக நின்ற மின்கம்பம் சரிந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் சம்பந்தர் மேலத்தெருவுக்கு விரைந்து வந்து மின்கம்பத்தை சீரமைத்து மின் வினியோகம் வழங்கினர். இதேபோல் கேசவசமுத்திரம், கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் வாழைகள் சேதமடைந்தன. சேரன்மாதேவி, கூனியூர், சக்திகுளம், உதயமார்த்தாண்டபுரம் பகுதியில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.

நாங்குநேரி பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின்தடை ஏற்பட்ட பகுதிகளை கண்டுபிடித்து இரவு 8.30 மணியளவில் சரிசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்