5 கிலோமீட்டர் தூரம் பின்பக்கமாக ஓடி ஓசூர் கல்லூரி மாணவர் சாதனை

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-05-27 03:01 GMT

திருச்செங்கோடு,

உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,100 மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட மாரத்தான் நடைபெற்றது. 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பி.சி.ஏ. படிக்கும் கல்லூரி மாணவரான விஜய் என்பவர் 5 கிலோமீட்டர் தூரத்தை பின்பக்கமாக ஓடி கடந்தது பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்