வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2022-08-09 21:08 GMT

மதுரை அழகப்பன் நகர், நேரு நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தசீனிவாசன் (வயது 57). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த தங்க மோதிரம், சங்கிலி என 6 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்