கயத்தாறில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கயத்தாறு:
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து நேற்று கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு சரக பங்கு தந்தை எரிக் ஷோ தலைமை தாங்கினார். இதில் நெல்லை மாவட்ட உடையார்பட்டி பங்குத்தந்தைகள் சி.பி. மைக்கேல்ராஜ், ஜோசப், சத்திரப்பட்டி உபதேசிகர் அல்போன்ஸ், ஆர்.சி. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.