போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது;

Update:2022-10-14 22:20 IST

போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று போடி மகளிா் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் அருகே உள்ள இருக்கையில் தான் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர்வார்கள். சுவர் இடிந்து விழும் போது பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சுவர் இடிந்து சாலையோரம் சென்ற கழிவு நீர் கால்வாய் மீது விழுந்தது. இதனால் கால்வாய் மூடியதால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் ஓடியது. 

Tags:    

மேலும் செய்திகள்