போடியில் திருமண மண்டபத்தில் திருடிய வாலிபர்

போடியில் திருமண மண்டபத்தில் திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-30 18:45 GMT

போடி புதூர் சவுந்திரவேல் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 59). இவர், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பொறுப்பாளராக உள்ளார். நேற்று காலை இவர், மண்டபத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த அலங்கார மின்விளக்குள் மற்றும் டியூப் லைட்டுகள் திருடுபோய் இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மண்டபத்திற்குள் புகுந்து திருடியது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்