தூத்துக்குடி தாளமுத்துநகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி தாளமுத்துநகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 18:45 GMT

சாலை மறியல்

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை தாளமுத்துநகர் மெயின் பஜாரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து இருந்தனர். இந்திராநகர் பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவி்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். ஆகையால் எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது

இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் கலைந்து செல்லாததால், மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்