தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் எஸ்.காமராஜபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். மறுநாள் காலையில் பார்த்த போது, யாரோ மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்