திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

கம்பத்தில் திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-05 16:54 GMT

கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை. இதனால் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் அருண்குமார் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அவரது தாய் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்