ஆனைமலை ஒழுங்குமுைற விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு
ஆனைமலை ஒழுங்குமுைற விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது.;
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுைற விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது.
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 85 விவசாயிகள் 604 மூட்டைகளில் கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதில் 365 மூட்டை முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு 76 ரூபாய் 50 காசு முதல் 83 ரூபாய் 25 காசு வரை ஏலம் விடப்பட்டது. 239 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 56 ரூபாய் முதல் 72 ரூபாய் 40 காசு வரை ஏலம் போனது.
வரத்து அதிகரிப்பு
கடந்த வாரத்தை விட கொப்பரைத் தேங்காய் கிலோவிற்கு 35 காசு விலை அதிகரித்துள்ளது. மேலும் தேங்காய் சீசன் தொடக்கம் என்பதாலும், தேங்காய் விலை சற்று உயர்ந்துள்ளதாலும், வெயில் காலம் என்பதால் சுலபமாக உலர்த்த இயலுவதன் காரணமாகவும் கடந்த வாரத்தை விட 121 மூட்டைகள் அதிகமாக கொண்டு வரப்பட்டு இருந்தது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 7 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டு கொப்பரை தேங்காயை வாங்கிச் சென்றனர். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.