இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சரிடம் ஒப்படைப்பு

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-09-29 08:55 GMT

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை சமர்ப்பித்தார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி, பொதுத்துறை செயலாளர் க. நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் உறுப்பினர்-செயலர் ஜெசிந்தா லாசரஸ், உள்துறை துணைச் செயலாளர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்