திருக்கோவிலூரில் ஜமாபந்தி
திருக்கோவிலூரில் ஜமாபந்தி 5-ந் தேதி தொடங்குகிறது.;
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக எழுதி கொடுக்கலாம். இந்த தகவலை திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தெரிவித்துள்ளார்.