பள்ளி மாணவி-சிறுமி கடத்தலா? போலீசார் விசாரணை

பள்ளி மாணவி-சிறுமி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-22 17:40 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே நல்லம்மாள்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அஞ்சலை (வயது 38). இவர்களது மகள் லாவண்யா (17), இந்நிலையில் வீட்டில் இருந்த லாவண்யாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அஞ்சலை அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி அருகே மேலநெம்மகோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் பிரியதர்ஷினி (17). இவர் ஆலங்குடி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்