சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்- 10 பேர் மீது வழக்கு

சங்கரன்கோவிலில், காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-18 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில், காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதல் திருமணம்

சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்த சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (வயது 23). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகள் கோமதி (20). உறவினர்களான இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தபோது காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கோமதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடத்தல்

இந்தநிலையில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர்முருகன் வீட்டில் கோமதி இருந்தபோது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், தாயார் ராஜம்மாள், சித்தி அனிதா உள்பட 10 பேர் கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சங்கர் முருகன் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், பவுன் பாண்டியன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்