விக்கிரவாண்டிவரதராஜபெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.

Update: 2023-01-11 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நேற்று கூடாரவல்லி உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு வெண்ணை, பால் சாதம் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை மாலோலன் பட்டாச்சாரியார் முன்னின்று செய்திருந்தார். உற்சவ ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்