தேசிய லங்காடி போட்டியில் 2-ம் பரிசு: கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-09-05 18:22 GMT

தேசிய அளவிலான லங்காடி போட்டிகள் அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக துளசிகொடும்பில் செயல்படும் கரூர் சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் ரக்ஷன், ஸ்ரீநிதின், சபரிஷ், ஹர்சித், வருண்கார்த்திக், சுமித், சர்னித்பாலா, உதிஷ்வர், மோகித், கவின்மிஷ்ரா, மிசோத் சர்வேஷ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு விளையாடி 2-ம் பரிசு பெற்றனர். இதனையடுத்து இம்மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாகத்தினர், மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்