இலந்தை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கலவை அருகே இலந்தை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update:2023-06-02 23:23 IST

கலவையை அடுத்த அத்தியாயம் கிராமத்தில் உள்ள இலந்தை வாழியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசத்தில் வைத்து, கோ பூஜை, வாஸ்து பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை நடத்தி, பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசத்தை எடுத்து சென்று கோவில் கோபுர விமானத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் புனித நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டன. மாலையில் இலந்தை வாழியம்மன் புஷ்ப அலங்காரத்தில் கிராம வீதியில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்