லாரி மோதி தொழிலாளி பலி

விக்கிரமங்கலம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-06-28 18:17 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித்திருக்கோணம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவரது கணவர் முருகானந்தம்(வயது 45). இவர் சிங்கப்பூரில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான செட்டித்திருக்கோணத்திற்கு வந்த முருகானந்தம் நேற்று மதியம் வி.கைகாட்டி பகுதிக்கு தனது வீடு கட்டும் வேலையின் காரணமாக சென்று விட்டு திரும்பி தனது மொபட்டில் செட்டித்திருகோணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாதா ஆலய பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக முருகானந்தம் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்கிரமங்கலம் போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்