சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கு; கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-02-01 20:31 GMT


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்கள் கிராம கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 100 ஆண்டுகளாக சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டை போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேவல் சண்டை நடத்த உள்ளோம். இதற்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் "சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் கலெக்டர் வருகிற 7-ந் தேதிக்கு முன்னதாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்