பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-25 21:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. சாட்சிய சட்டங்களின் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க துணை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் வக்கீல்கள் கணேஷ், இளங்கோ, மீரான் மொய்தீன், செல்வராஜ், செந்தில்குமார், பிரபு அம்பேத்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்