பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-08-24 02:04 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பால்வளத்துறை மற்றும் நெல்லை ஆவின் இணைந்து கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கிகடனாக 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் 80 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் வங்கி கடன் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், கூட்டுறவு சங்க அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்